our inspiration

Sunday, November 8, 2015

அறிமுகம்



உலகில் வாழும் அனைத்துஉயிர்களும்,சிற்றுயிர்களான பூச்சிகள் முதல் 6 அறிவு கொண்ட மனிதன்வரை, அமைதியான துன்பமற்ற இனிமையான வாழ்க்கையையே விரும்புகின்றன,ஆனால் கிடைப்பதென்னவோ இன்பமும் துன்பமும் கலந்த கலவை. வாழ்க்கையில் துன்பத்தின் அளவு அதிகமானால் அது பெரும் துரதிர்ஷ்டமாகும்,இதற்குக் காரணம் என்ன? துன்பத்திலிருந்து முழுமையாகவிடுபடும் வழி என்ன? இல்லாவிட்டால் அதைக்குறைக்கவாவது முடியுமா? இவ்வாறு முயலுவது எல்லா உயிர்க்கும் பொதுவானகுணம்ஆனால் பகுத்தறியும் இயல்புள்ள மனிதனுக்கு அது தவிர்க்கமுடியாத கடமையாகும். ஆகவே இதை விரிவாக ஆராயலாம்.

முதலில் துன்பம் எங்கு ஏற்படுகிறது எனப்பார்க்கலாம்

1) உடலில் ஏற்பட்டு உணரப்படும் துன்பம்
2) உள்ளத்தில் ஏற்பட்டு உணரப்படும் துன்பம் ஆகியனவாகும் துன்பம் ஏற்படக்காரணங்களாவன

1) அறியாமை, 2)வினைப்பயன்


அறியாமை,

இதில் அறியாமை என்பது இன்பத்தை துன்பம் எனவும், துன்பத்தை இன்பம் எனவும், எண்ணுவதாகும், இவ்வறியாமை உடல்துன்பத்துக்கு ஓரளவு காரணமெனினும் கோபம், பேராசை, பொறாமை,வன்மம் போன்ற உணர்வுகளை ஏற்படுத்தி உள்ளத்தையேஅதிகமாகப்பாதிக்கக்கூடியது. மனதைச் செம்மைப்படுத்துவதன் மூலம் இத்துன்பத்தை விலக்கலாம்.

வினைப்பயன்

நாம் செய்த,செய்துகொண்டுள்ள,செய்யப்போகும் காரியங்களால் ஏற்பட்டு நம்மைவந்தடையும் வறுமை,உடல்நலக்குறைபாடு போன்ற விளைவுகளாகும் இவை 2ம் மிகுதியாக உடலையே பாதிக்கின்றன, இதிலிருந்து விடுபடும் வழியைப் பார்ப்போம் ,அவை

1) சரியாண உணவுப்பழக்கம்
2) தேவையானஅளவு உழைப்பு மற்றும் ஓய்வு
3) முறையான உடற்பயிற்சி
4) ஒழுக்கத்துடன் உடலைப்பேணி தீய செயல்களை விலக்கல்

இவற்றில் உணவைத்தவிர மற்ற 3-ம் பெருமளவு நமது கட்டுப்பாட்டில் உள்ளவை ஆகும் அவற்றை நாம் எளிதில் முறைப்படுத்திக்கொள்ளலாம் ஆனால் உணவைப்பொருத்த அளவில் நாம் பிறறையே சார்ந்திருக்கவேண்டி உள்ளது.அதில் ஏற்படும் சிறியமாறுபாடே உடலைப் பிணியின்றிப் பாதுகாக்கும், நமது உன்னதமுயற்சிகளைக் கெடுக்கப் போதுமானது.

உணவுப்பொருட்களில் அடிப்படை உணவுப்பொருட்கள், மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்கள் என இருவகைகளிலும் கலந்துவிடும் நஞ்சே நோய்களுக்கும் அதன் மூலம் ஏற்படும் துன்பத்துக்கும் காரணம்.

பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்கள் அது உருவாக்கப்படும் முறையினாலேயே நோய்களை விரைவாக ஏற்படுத்தும் தன்மை பெறுகின்றன ஆகவே அவை கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டியவையகும்.

அடிப்படை உணவுப்பொருட்களான குடிநீர், காய்கறி, அரிசி, பருப்பு, பழங்கள், எண்ணெய் வகைகள் போன்றவை சிறிதளவு தயாரிப்பு முறைகளாளும், அதிகஅளவில் ஆலைக் கழிவுகள்,இரசாயன உரம் மற்றும் மருந்துகள் மூலம் செய்யப்படும் விவசாய முறைகளாளும் நஞ்சாகின்றன,

சர்கரைநோய், இதயநோய்,பக்கவாதம்,புற்றுநோய்,உடல் உள்ளுருப்புகள் கெட்டுப்போதல்,ரத்தஅழுத்தம்,அதீத உடல்பருமன்,எலும்பு மற்றும் மூட்டுத்தேய்மானம் மற்றும் குழந்தைப்பேரில்லாமை,உடற்குறைபாடுள்ள குழந்தைகள் பிறத்தல் ஆகிய மோசமான விளைவுகளுக்கு மேற்க்கண்ட உணவில்எஞ்சும் நஞ்சே காரணமாகும்.

எனவே நாமும் நமது பாசத்துக்குரிய சந்ததிகளும் நோயற்ற,துன்பமில்லா நல்வாழ்வு வாழ நஞ்சில்லா வேளாண்மை முறைகளைக் கடைப்பிடிப்பதும் நஞ்சில்லா உணவையே பயன்படுத்துவதும் அவசியமாகும்.

நமது முன்னோர்கள் நமக்கு வளமான மண்ணையும்,எண்ணற்ற பயிர் வகைகளையும்,சுத்தமான சுவையான நீரையும், தூயகாற்றையும் ஆரோக்கியமான அமைதியான நல் வாழ்க்கைமுறையையும் விட்டுச்சென்றனர்,
நாம்நமதுசந்ததிகளுக்குவிட்டுச்செல்வது,அசுத்தக்காற்று,உரம்,பூச்சிமருந்தால் மாசுபட்ட நீர்,ரசாயனப்பால்,விஷமேறிய அரிசி,பருப்பு,நஞ்சில் ஊரிய காய்கறிகள்,மற்றும் பழங்கள்,புதுப்புது நோய்கள்,அதிநவீன மருத்துவமனைகள், மருத்துவச்செலவுக்கு இன்ஸ்யூரன்ஸ் மற்றும் நிறையப்பணம் .

போனது போகட்டும் உலகில் எதற்கும் ஒரு விலை உண்டு, ஒன்றைக்கொடுத்து மற்றொன்றை வாங்கலாம்,நாம் எதைக் கொடுத்து எதை வாங்கப் போகிறோம்? எதை விடுத்து எதைப் பெறப்போகிறோம்?

சிந்திப்போம்,சேர்ந்திருப்போம்,செயல்படுவோம்,சிதைந்த வளங்களைச்சீரமைப்போம். வாருங்கள் , வாழ்க்கை ஒரு வைபவமாகட்டும்

இயற்கை வேளாண்மை

சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் ;அதனால்
உழந்தும் உழவே தலை

உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேம் என்பார்க்கும் நிலை




மனிதகுலம் மாபெரும் அறிவியல் முன்னேற்றம் அடைந்திருந்தாலும், அதன் அடிப்படைத் தேவைகள் அனைத்தும் விவசாயம் மூலமாகவே நிறைவு செய்யப்படுகிறது.உணவில்லையேல் வாழ்க்கை இல்லை, நல் உடை இல்லையேல் நாகரிகமில்லை, உணவும் உடையும் தந்து, உயிரையும் உடல் அழகையும் வளர்ப்பது யார்?  அவன்தான் விவசாயி என்பவன்.
.
நாளை நம்வண்டி விரைந்தோட எரிபொருள் விளைவிப்பவனும் அவனே.ஆகவே விவசாயமே அடிப்படைத்தொழில்.பெரும் மரத்தை தாங்கும் வேர் போல, நாடு வளம்பெறவும் நல் அரசு நிலைபெறவும் நாட்டுக்கு தூன் போன்றவன் விவசாயி. அவன் வளர்ந்தால் நாடும் வளரும் அவன் நசிந்தால் நாடு வேரற்ற மரமாகும்

ஒரு நாடு பாதுகாப்பாகவும்,சமுதாயக்குழப்பங்கள் ஏதும் இல்லாமலும் இருக்கவேண்டும் என்றால், அந்நாடு பெருமளவு தற்சார்புடயதாக இருக்கவேண்டும், அதுவும் விவசாயத்தில் தற்சார்பு பெற்றிருப்பது என்பது மிகமிக அவசியமானதாகும்,

விவசாயத்தில் தற்சார்பு என்பது, விவசாயியின் தற்சார்பைப்பொருத்து உள்ளது,. நிலம்,விதை,உரம்,தொழில்நுட்பம், மூலப்பொருட்கள், பண்ணைக்கருவிகள் மற்றும் அவற்றிற்காண ஆற்றல் மூலம், ஆகியன அவர்களிடமோ அல்லது அவர்கள் சார்ந்த குழுவிடமோ இருப்பின் அவர்கள் தற்சார்புடைய விவசாயிகளாவர் அத்தகைய தற்சார்பு, இயற்கைவேளாண்மை முறைகள் மூலமே சாத்தியம்,

நாடும்,மக்களும்,உழவரும் நன்மையடய,நம் எண்ணங்கள் வெறும் எண்ணங்களாகமட்டும் இருந்தால்போதது செயல் வடிவமும் பெறவேண்டும்,அச்செயல் வடிவமே ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் இயற்கைஉழவர் கூட்டமைப்பு ஆகும், கூட்டமைப்பின் அமைப்புமுறை, நோக்கங்கள் மற்றும் செயல்பாடுகளை இப்பகுதியில் நீங்கள் காணலாம்

ஜெய் குருதேவ்

வாழ்த்துக்களுடன்,
குருவின் நல்லடியார்கள்
(SSRNFA)

No comments:

Post a Comment