our inspiration

Showing posts with label நோயின்றிவாழவேண்டுமா?. Show all posts
Showing posts with label நோயின்றிவாழவேண்டுமா?. Show all posts

Saturday, January 19, 2013

மாடே இல்லாமல் பால் உற்பத்தி!



By கே.என். ராமசந்திரன்
First Published : 19 January 2013 01:34 AM IST



தன்னால் முடியாத ஒரு காரியத்தைச் செய்துதரச் சொல்லி நச்சரிக்கிறவனைப் பார்த்து, ""காளை மாடு, காளை மாடு என்கிறேன், உழக்குப்பால், உழக்குப்பால் என்று கழுத்தறுக்கிறாயே'' என்று சீறுவார்கள். ஆனால், மாடே இல்லாமல் பாலை உற்பத்தி செய்கிற வித்தை சீனர்களுக்கும் இந்தியர்களுக்கும் கைவந்த கலையாகிவிட்டது.



2008-ஆம் ஆண்டில் சீனா மேலைநாடுகளுக்கு ஏற்றுமதி செய்த பால் மற்றும் குழந்தை உணவான பால் பொருள்களில் வேதிப்பொருள்கள் அதிக அளவில் கலந்திருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டு அது, ""மாபெரும் பால் ஊழல்'' என்று பிரபலமானது.

 ஏராளமான குழந்தைகள் உள்பட பலர் நோய்வாய்ப்பட்டதால் மேலை நாடுகள் சீனத்திலிருந்து பால் பொருள்களை இறக்குமதி செய்வதற்குத் தடை விதித்தன.

 சீனா ஏற்றுமதிசெய்த பால் மற்றும் பால் உணவுகளில் "மேலமைன்' என்ற தொழிலியல் வேதி கலக்கப்பட்டிருந்தது. தீப்பிடிக்காத கூரை மற்றும் தடுப்புகளைத் தயாரிக்க உதவும் "மேலமைன் பார்மால்டிஹைடு' என்ற பிளாஸ்டிக் ரோசனத்தை உற்பத்தி செய்யத் தேவையான கச்சாப்பொருள் "மேலமைன்'. அதைப் பாலுடன் கலந்துவிட்டால் கூடுதலான புரதச்சத்து இருப்பதைப்போல முதல் கட்டச் சோதனைகளில் காட்டும். ஆனால், "மேலமைன்', சிறுநீரகத்திலும் சிறுநீர் உறுப்புகளிலும் சேதமேற்படுத்தும் என்று கண்டுபிடிக்கப்பட்டதும் அதை உணவுப் பொருள்களில் சேர்ப்பது உலகளாவிய அளவில் தடை செய்யப்பட்டுவிட்டது.

 சீனாவின் பால் ஊழல், 2008 ஜூலையில் வெளிச்சத்துக்கு வந்தது. அடுத்த நவம்பருக்குள் மூன்று லட்சம் பேர் "மேலமைன்' ஏற்படுத்திய கோளாறுகளால் பாதிக்கப்பட்டதாகக் கண்டறியப்பட்டது. சிறுநீரகத்தில் கல் உருவாவது முதலான பல்வேறு சிறுநீரகக் கோளாறுகள் காரணமாகக் குறைந்தது ஆறு குழந்தைகள் மரணமடைந்ததாகவும் தெரியவந்தது.

எப்படியாவது ஏற்றுமதியைப் பெருக்க வேண்டும் என்ற வெறியுடனிருக்கிற சீனத் தொழில்துறை தாம் பயன்படுத்துகிற வேதிப்பொருள்கள் உடலுக்கு ஊறு விளைவிக்கக்கூடும் என்பன போன்ற "அல்ப விஷயங்களுக்காக' அலட்டிக் கொள்வதில்லை!

நம் நாட்டுப் பால் உற்பத்தியாளர்களில் சிலர் உரத்தைப் போட்டு, தீவனம் வளர்த்து,  அதைப் பசு மாட்டுக்கு ஊட்டி அதன் பிறகு பாலைக் கறந்து விற்பது தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவது போன்ற விஷயம் என்று எண்ணியோ என்னவோ - நேரடியாக - யூரியா, உரம், காஸ்டிக் சோடா, சமையல் எண்ணெய், சலவை சோப்புத்தூள், தண்ணீர் ஆகியவற்றுடன் கொஞ்சம் பாலையும் கலந்து செயற்கைப் பாலை நேரடியாகவே தயாரித்து விட்டார்கள். அது பார்ப்பதற்கு இயற்கையான பாலைப் போலவே நிறமும், செறிவும், கொழுப்பு உள்ளடக்கமும் கொண்டிருக்கும்.

   "பால்செறிவு மானி'யும் எளிதில் ஏமாந்துவிடும். உணவு ஆய்வகங்களில் முதல் நிலைச் சோதனைகளிலும்கூட அந்தச் "செயற்கைப் பால்' தேறிவிடும். ஆனால், அதைத் தொடர்ந்து பயன்படுத்துகிறவர்களுக்குப் பார்வைப்புலனும் செவிப்புலனும் பாதிக்கப்படுவதுடன் புற்றுநோய் வருவதற்கும் வாய்ப்புண்டு.

  சிறிதுகூட மனிதாபிமானமோ, பசு அபிமானமோ இல்லாமல் காசு மட்டுமே குறி  என்றிருக்கிற சில பால் உற்பத்தியாளர்களுக்கு "ஆக்சிடோசின்' என்ற வேதி கை கொடுக்கிறது. இயற்கையான ஆக்சிடோசின், விலங்குகளின் பிட்யூட்டரிச் சுரப்பியின் பின்பகுதியில் உற்பத்தியாகிச் சேமித்து வைக்கப்படுகிற ஒரு ஹார்மோன். அது பெண்களின் பிரசவத்திற்குப் பிறகு கருப்பையைச் சுருங்க வைப்பதற்கும் மார்பகத்திலிருந்து பாலை வெளிப்படச் செய்வதற்கும் உதவுகிறது. அந்த ஹார்மோன் செயற்கையாகவும் தயாரிக்கப்பட்டு விற்பனையாகிறது.

 பிரசவத்துக்குப் பின் கருப்பையில் சிக்கல் ஏற்பட்டால் அவசர கால சிகிச்சைக்கு மருத்துவர்கள் அதைப் பயன்படுத்துவார்கள். அதைக் கவனக் குறைவாகப் பயன்படுத்தினால் கருப்பை சேதப்பட்டுக் கிழிந்து கூடப் போகலாம்.

கால்நடைகளுக்குப் பயன்படுத்தப்படும் செயற்கை ஆக்சிடோசின் மிகவும் மலிவாக, ஒரு குமிழ் ஐம்பது பைசா விலையில் கிடைக்கிறது. பால் கறப்பதற்குச் சற்று முன் அதைப் பால் மடியில் ஊசி மூலம் செலுத்திவிட்டால் கூடுதலாகப் பால் கிடைக்கும் என்ற தவறான எண்ணம் பால்காரர்களுக்கு ஏற்பட்டுவிட்டது. ஆனால் உண்மையில் அது பால் காம்பிலுள்ள சுருக்குத் தசைகளைத் தளர்த்திவிட்டுப் பால் வேகமாக வெளிப்பட மட்டுமே செய்கிறது. அத்துடன் அது பசுவின் இனப்பெருக்க உறுப்புகளைச் சேதப்படுத்தவும் கூடும். பொன்  முட்டையிடும் வாத்தை அறுத்தவன் கதை மாதிரி, நிறையப் பால் கிடைப்பதைப் போலத் தோன்றினாலும் இரண்டு மூன்று ஆண்டுகளில் பசு பால் தருவது குறைந்து மலடாகவும் ஆகிவிடும். அதன் பிறகு அதைக் "கோ-சாலை'க்கோ (பசுப் பாதுகாப்பு இல்லம்), கசாப்புக் கடைக்கோ அனுப்ப வேண்டியதுதான்.

 "ஆக்சிடோசின்' செலுத்திக் கிடைத்த பாலைப் பருகும் மனிதர்களுக்கும் குறிப்பாகச் சிறு குழந்தைகளுக்கும் பலவிதமான உடலியல் கோளாறுகள் வரும். கருத்தரித்திருக்கும் தாய்மார்கள் அந்தப் பாலைப் பருகினால் பிரசவத்தின்போது கடுமையான உதிரப் போக்கு ஏற்படும் வாய்ப்பு அதிகமாகும். அதில் தப்பிப் பிழைத்தாலும் குழந்தைக்குப் பாலூட்டுவதில் சிக்கல் ஏற்படலாம். பார்வைத் திறனும் கேட்கும் திறனும் பாதிக்கப்படுவதாயும் கண்டறியப்பட்டிருக்கிறது.

 மாடுகளுக்கு மட்டுமின்றிக் காய்கனி உற்பத்தியிலும் ஆக்சிடோசின் பயன்படுத்தப்படுகிறது. பறங்கி, பூசணி, சுரை போன்ற காய்களில் ஆக்சிடோசினை ஊசி மூலம் செலுத்தினால் அவற்றின் பருமன் ஓரிரு நாள்களிலேயே இருமடங்காக அதிகரித்து விடுகிறது.

 இவ்வாறு ஹார்மோன்கள் உணவுப் பொருள்களின் மூலம் உடலில் புகும்போது ஆண்மை மற்றும் பெண்மை பாதிக்கப்படும். சிறுமிகள் உரிய காலத்துக்கு முன்பே பருவமெய்தி விடும் வாய்ப்பு அதிகரிக்கிறது.

  பால்காரர்களை மட்டும் பழிப்பதில் அர்த்தமில்லை. எல்லாருமே பணம் சம்பாதிப்பதற்குப் பேயாக அலைகிறார்கள். ஆயிரம் கோடி ரூபாய் சொத்து சேர்ந்த பின்னரும் அடுத்த ஆயிரம் கோடி ரூபாயைச் சேர்க்க ஆலாய்ப் பறந்து எந்தவிதமான ஊழலிலும் ஈடுபடத் தயங்காதவர்களிருக்கிற நம்நாட்டில் சாதாரண வியாபாரிக்கு அந்த நாட்டம் இல்லாமலா போகும்?

 சில ஆண்டுகளுக்கு முன் தஞ்சாவூரிலிருக்கும் ஒரு பிரபலமான நகைக் கடையில் ஒரு சவரன் தங்க நாணயத்தை வாங்கினேன். சில மாதங்கள் கழித்து நகை செய்வதற்காக அதை உருக்கியபோது அதிலிருந்து ஒரு வட்டமான செப்புத் தகடு பிரிந்து வந்தது. நகைக் கடை முதலாளியிடம் கேட்டபோது, ""நான் என்ன செய்ய முடியும்? நானே சவரன் காசை இன்னொருவரிடம் வாங்கித்தானே விற்கிறேன்'' என்று சொல்லிவிட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டார்.

 இவ்வாறாக எல்லாப் பொருள்களின் விஷயத்திலுமே உற்பத்தியாளரிடமிருந்து புறப்பட்டுப் பல கைகள் மாறி நுகர்வோரைச் சென்றடையும் வரை ஒவ்வொரு கட்டத்திலும் கலப்படம் கூடிக் கொண்டே போகிறது.

 அரிசியில் கல், மிளகாய்ப் பொடியில் செங்கல் தூள், மிளகில் பப்பாளி விதை, தேயிலையில் உளுந்துத் தோலி, மஞ்சள் பொடியில் நிறமேற்றப்பட்ட சுண்ணாம்புத் தூள், சர்க்கரையில் ரவை என்று ஜோடி சேர்ப்பதில் "முதுநிலை முனைவர்' பட்டம் பெறும் அளவுக்குத் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.

 அரிசியைப் போலவே, பருப்பைப் போலவே, உளுந்து பயிறைப் போலவே தோற்றமளிக்கும் கல் குருணைகளை உருவாக்கும் யந்திரங்களை வடிவமைத்து, அவற்றுக்கு அரசின் அனுமதியையும் பெற்று "தொழில்' செய்கிறார்கள்!

 இவ்வாறான கலப்படப் பொருள்களைச் சற்று பொறுக்கினால் பிரித்தெடுத்துவிட முடியும். ஆனால் பூச்சிக் கொல்லிகள் மற்றும் ரசாயன உரங்கள் மூலமாகத் தானியங்களுக்குள் பரவிவிடும் வேதிகளை எப்படி நீக்க முடியும்?

  காய்-கனிகளுக்குக் கவர்ச்சி தரும் நிறங்களை ஏற்றவும், காய்கள் பழுக்காமலும் கனிகள் அழுகாமலும் தடுக்கவும் பயன்படும் வேதிகள், மரபியல் மாற்றம் செய்ய உதவும் வேதிகள் எனப் பல வேதிகளை நாம் உட்கொள்கிறோம். அதுமட்டுமின்றி உணவுப் பாக்கெட்டுகளில் அச்சிடப் பயன்படுத்தப்படும் சாய வேதிகளும் உணவில் கலந்து விடுகின்றன.

÷ஊறுகாய்களின் நிறத்தை மேம்படுத்தவும், டப்பியில் அடைக்கப்பட்டு வரும் காய்கறிகளின் பசுமை மாறாமல் தடுக்கவும் செப்பு வேதிகள் கலக்கப்படுகின்றன. தர்பூசணி, பட்டாணி, குட மிளகாய், கத்தரிக்காய் போன்றவை ஊசி மூலம் ஏற்றப்படும் வேதிகளால் மெருகேற்றப்படுகின்றன. ஆப்பிள் பழங்களுக்கு மெருகேற்றக் "காரீய ஆர்சனேட்' தெளிக்கப்படுகிறது.

 மஞ்சள் பொடி மற்றும் மசாலாத் தூள்களில் "காரீய குரோமேட்' கலக்கப்படுகிறது. இவ் வேதிகள் ரத்த சோகை, குறைப் பிரசவம், முடக்குவாதம் போன்ற கோளாறுகளை உண்டாக்க வல்லவை.

 இந்தியாவின் விவசாயிகள், ஐரோப்பிய விவசாயிகளைவிட 750 மடங்கு அதிகமான வேதி உரங்களையும் பூச்சிக் கொல்லிகளையும் பயன்படுத்துகிறார்கள். இதனாலேயே மேலை நாடுகள் இந்தியாவிலிருந்து உணவுப் பொருள்களை இறக்குமதி செய்வதற்குக் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கின்றன.

 இந்தியத் தாய்மார்கள் தரும் தாய்ப் பாலில் குளோரின் மற்றும் பாஸ்பேட் பூச்சிக்கொல்லிகளின் எச்சங்கள் தென்படுவதை ஓர் ஆய்வு கண்டுபிடித்துள்ளது. முலைப் புற்று நோயால் பாதிக்கப்பட்ட பெண்களின் முலைப் பாலில் மற்ற பெண்களின் முலைப் பாலில் உள்ளதைவிட அதிக அளவில் பூச்சிக் கொல்லிகளின் எச்சங்கள் காணப்படுவதும் கண்டறியப்பட்டது.

 பல ஆண்டுகளுக்கு முன் ஒரு ஜெர்மானிய மருந்தாய்வு நிறுவனம் கத்தரிச் செடியின் வேர்களின் மருத்துவ குணங்களைச் சோதிக்க விரும்பி இந்தியாவிலிருந்து அவற்றை இறக்குமதி செய்தது. வழக்கப்படியே இந்திய ஏற்றுமதியாளர் கத்தரிச் செடி வேர்களுடன் கையிலகப்பட்ட காட்டுச் செடி வேர்களையும் கலப்படம் செய்து அனுப்பினார்.

      ஜெர்மானிய நிறுவனம் அவர் அனுப்பிய கலப்பட வேர்களில் புற்றுநோயைத் தடுக்கும் வேதிகள் இருப்பதைக் கண்டு, கத்தரிச் செடி வேர் வேண்டாம், கலப்பட வேர்களை மட்டும் நிறையத் திரட்டி அனுப்பும்படி கோரியது.

 இவ்வாறுதான் ரயில் பாதைகளில் கேட்பாரற்று மண்டிக் கிடந்த "நித்திய கல்யாணிச் செடி'யின் மகத்துவம் கண்டுபிடிக்கப்பட்டது.

  எனக்குத் தெரிந்தவரை கலப்படத்தால் ஏற்பட்ட ஒரே ஒரு நன்மை இதுதான்!

Monday, May 28, 2012

துரித உணவைத் தவிர்ப்போம்

ஆர்.எஸ். நாராயணன்
First Published : 28 May 2012 02:21:38 AM IST Dinamani



உணவே மருந்து; மருந்தே உணவு' என்று வாழ்ந்து வந்த தமிழர்களுக்கு நாகரிகத்தின் காரணமாக, பாரம்பரியம் இழந்து அவர்கள் உண்ணும் உணவே விஷமாகிவிட்டது.


இயற்கை விவசாயமும் மெல்ல மெல்ல உயர்ந்தும் வருகிறது. அவ்வாறு இயற்கை விவசாய உணவை வாங்க இயலாதவர்கள், கடையில் வாங்கும் ரசாயனத்தில் விளைந்த காய்கறிகள் - பழங்கள் - தானியங்களை 8 மணி நேரம் சுத்தமான நீரில் ஊற வைத்து அத்தண்ணீரை வடித்துவிடலாம். சற்று விஷம் குறைய வாய்ப்புண்டு.


அதற்காக சமைக்கும் உணவே வேண்டாம் என்று முடிவு செய்யக்கூடாது. விதம் விதமான துரித உணவுகள் அங்காடிகளில் குவிந்தவண்ணம் உள்ளன. குழந்தைகள் வாங்குவதற்காக பாலிவுட், கோலிவுட் நடிகர் நடிகைகளும், கிரிக்கெட் வீரர்களும் அவற்றை உண்பதாக காட்டுவார்கள். இவற்றை "ஜங்க் ஃபுட்' என்பார்கள். அதாவது கெட்ட உணவு.

இந்திய ஊட்ட உணவு நிபுணர்கள் கெட்ட உணவு என்பதை ஏற்க மாட்டார்கள். "தவறான டயட்' அதாவது ""சமநிலை இழந்த ஊட்ட உணவின் கூட்டல்'' என்பார்கள். கெட்ட உணவு விளம்பரத்தில் ஊட்ட உணவு நிபுணர்களும் பங்கேற்பது உண்டு.


சமையல் இல்லாமல் அதாவது சமையலறைக்குச் செல்லாமல் பல மாதங்களுக்கு முன்பே சமைக்கப்பட்டதும் கெடாமல் இருக்க ரசாயனங்களும் சேர்க்கப்பட்ட பாக்கெட் உணவுதான் துரித உணவு. இவற்றிலும் பூச்சி மருந்து விஷம் இருக்க வாய்ப்புண்டு. பூச்சி மருந்து விஷத்திற்கு மேல் வேறு ஆபத்துகளும் உண்டு.


என்னென்ன துரித உணவுகள் நமக்குக் கிடைக்கின்றன? அவற்றில் உள்ள ஊட்டங்களின் அளவு என்ன? உணவைக் கெடாமல் பாதுகாக்கச் சேர்க்கப்படும் ரசாயனங்களில் நன்மை உண்டா? எப்படி சமச்சீரான உணவு பாதிக்கப்படுகிறது? என்று சிந்திக்கத் தெரிந்தவர்கள் சிந்தித்து துரித உணவிலிருந்து விடுதலை பெறுவது நன்மை பயக்கும்.


துரித உணவில் அதிகமான கலோரி உண்டு. ஊட்டம் இல்லாததால் நோய் ஏற்படும். முக்கியமாகக் கூடுதல் கொழுப்பு உடலில் சேர்ந்து குண்டுக்குழந்தைகளின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. உடலில் தேவைக்குமேல் சதை ஏறுவதால் சர்க்கரை நோய், உயர்ந்த ரத்த அழுத்தம் ஏற்பட்டு மனித ஆயுள் குறைகிறது.



100 வயது வாழ வேண்டிய மனிதன் 50, 60 வயதுகளில் இறக்க நேரிடும். ஆகவே மேலைநாடுகளில் துரித உணவு விளம்பரங்களுக்குத் தடை உண்டு. சில நாடுகளில் துரித உணவுக்குக் கொழுப்பு வரி போடுகிறார்கள். விளம்பரங்களால் தூண்டப்படும் குழந்தைகள் அளவுக்கு மீறி தனியார் நிறுவன உருளை வறுவல்களைத் தின்று பருமன் நோய் வருவதைக் கண்கூடாகப் பார்க்கலாம். குறைந்த எடை குழந்தைகளைவிடக் கூடுதல் எடை குழந்தைகளின் ஆரோக்கிய நிலை ஆபத்தில் முடியலாம்.


உணவில் இரண்டு வகையான கொழுப்புகள் உண்டு. ஒன்று சாதாரணக் கொழுப்பு. நெய், சமையல் எண்ணெய்களில் உண்டு.


மற்றொன்று டிரான்ஸ்ஃபேட் என்று கூறப்படும் கெட்டகொழுப்பு. இது அடர் கொழுப்பும் அல்ல. டிரான்ஸ் கொழுப்பு, கரையாத கொழுப்பு என்றும் கூறலாம். நெய், எண்ணெய்களை அடர் கொழுப்பு என்பர். கரையாத டிரான்ஸ் கொழுப்பு அடர் கொழுப்பைவிட நான்கு மடங்கு கெடுதல். கரையாத கொழுப்பு வனஸ்பதியில் அதிகம்.


எல்லா சமையல் எண்ணெய்களையும் ஹைட்ரஜனேஷன் செய்து வனஸ்பதி அல்லது டால்டா செய்யப்படுகிறது. எல்லா வகையான துரித உணவுகளிலும், கேக்குகளிலும் வனஸ்பதி பயனாகிறது. அமெரிக்க ஐரோப்பிய டால்டாவில் 2 சதவிகித டிரான்ஸ் கொழுப்பு அனுமதிக்கப்படுகிறது.


ஐரோப்பிய நாடுகளில் தேங்காய் எண்ணெய் டால்டாவுக்குப் பயனாவதால் டிரான்ஸ் கொழுப்பு குறைவு. தேங்காய் எண்ணெயில் அடர் கொழுப்பு உண்டு. ஆனால், கரையாத கொழுப்பு இல்லை. இந்தியாவில் தயாரிக்கப்படும் டால்டாக்களில் 12 முதல் 24 சதவிகிதம் கரையாத டிரான்ஸ் கொழுப்பு உள்ளது.


சில டால்டா நிறுவனங்களின் தயாரிப்புகளில் டிரான்ஸ் கொழுப்பு அனுமதிக்கப்பட்ட அளவுக்குமேல் மத்திய அரசால் அனுமதிக்கப்படுவது அடிப்படைத் தவறு. டிரான்ஸ் கொழுப்பு 2 கிராம், அடர் கொழுப்பு 20 கிராம் அளவுக்குமேல் மனிதன் உண்ணும்போது ரத்தக்குழாய் தடிக்கும். ரத்த அழுத்தம் உயரும். இதயம் மட்டுமல்ல, சிறுநீரகம் பழுதுறலாம். நீரிழிவு வரும். ஊளைச்சதையுள்ள குண்டுக்குழந்தை, குண்டுப் பெண்மணி நோயுடன் வாழ்ந்து குறைந்த ஆயுளில் இறந்துவிடுவார்கள்.


ஒரு மனிதன் நலமுடன் வாழ சராசரியாக 2,200 கலோரி உணவு போதும். இந்தக் கலோரி 300 கிராம் கார்போஹைட்ரேட், 6 கிராம் உப்பு, 20 கிராம் கொழுப்பு, 2 கிராம் டிரான்ஸ் கொழுப்பு ஆகியவற்றில் கிடைத்துவிடும். 300 கிராம் மாவுச்சத்து (கார்போ ஹைட்ரேட்) என்பதில் சர்க்கரையும் அடங்கும். தானியங்கள், பருப்பு வகைகளில் புரதச்சத்து உண்டு. வைட்டமின் சத்துக்காக உண்ணும் காய்கறி - பழங்களில் தேவையான நார்ச்சத்தும் கிட்டும்.



நாம் உண்ணும் பல உணவுகளில் மாவுச்சத்துடன் புரதச்சத்தும் உண்டு. ஆனால், துரித உணவுகளில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின் எதுவுமே இல்லை என்பதுடன், அனுமதிக்கப்படும் அளவுக்குமேல் உப்பும், கரையாத கொழுப்பும் உள்ளதால் மனித ஆயுள் குறைகிறது. ஆயுள் குறைவது மட்டுமல்ல, தினமும் மாத்திரைகள், ஊசிகள் என்று மனித உடல் மருந்துக்கு அடிமையாவதையும் கவனிக்கலாம்.


அதிகபட்சமாக அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் துரித உணவுகளிலும் குறைந்தபட்சமாக அவரவர் சமைக்கும் உணவுகளிலும் கெடாமல் இருக்கவும் நிறத்திற்காகவும் சேர்க்கப்படும் ரசாயனப் பொருள்களினாலும் நோய்கள் ஏற்படும். சாதாரணமாக சமைத்த உணவு 6, 7 மணி நேரத்திற்கு மேல் தாங்காது. பூஞ்சைக்காளான் பிடிக்கும். புளிக்கப் புளிக்கக் கெட்ட வாடை வரும். மோர், சாத்தூத்தம் (பழைய சோற்றில் நீர் ஊற்றி வைக்கப்படும் புளித்த நீராகாரம்) நீங்கலாக மற்ற உணவு கெட்டுவிடும். நீர் ஊற்றி வைக்கும் போது தண்ணீரில் உள்ள ஆக்சிஜன் காரணமாக ஈஸ்ட், லேக்டோ பாசிலஸ் போன்ற நுண்ணுயிரிகள் பெருகி உயிர் வாழ்வதால் மோர், நீராகாரம் உடலுக்கு நல்லது. மற்றவை அப்படி அல்ல. முற்காலத்தில் சர்க்கரைப்பாகு, தேன், உப்பு, கிராம்பு, எலுமிச்சை போன்றவை உணவு கெடாமல் இருக்கப் பயனாயிற்று. இப்போது ஃபிரிட்ஜ். மின்சாரம் நின்றுவிட்டால்? ஃபிரிட்ஜ் உணவும் பாதுகாப்பானது இல்லை.


மனிதர்கள் உண்ணும் ஜாம், ஜெல்லி, சீஸ், ஊறுகாய் போன்ற துரித உணவுகளில் பென்சோட் என்ற நச்சு சேர்க்கப்படுகிறது. பென்சீன் என்ற ரசாயனம் நிலக்கரி வாயுவிலிருந்து உருவாகும் எரிபொருள். பூச்சி மருந்துகளிலும் பென்சோட் உண்டு. அடைக்கப்பட்டு விற்கப்படும் இறைச்சிகளில் நைட்ரேட் சேர்க்கப்படுகிறது. ரொட்டி, பன், கேக் போன்றவற்றில் சோடியம் பென்சோட் சேர்க்கப்படுகிறது. வெள்ளை நிறம் பெற சல்ஃபைட் சேர்க்கப்படுகிறது. சிவப்பு / மஞ்சள் / பிங்க் நிறம் பெற அலுமினியம் குரோமைட் என்ற விஷப்பொருள் சேர்க்கப்படுகிறது. கேசரி பவுடர் என்ற பெயரில் குரோமைட் விற்கப்படுவதால் அதை அல்வாவிலும் கேசரியிலும் பயன்படுத்துவார்கள். விஷயமறியாத தாய்மார்கள் கேசரி பவுடரை வாங்கி சிவப்பு நிறத்துக்குப் பயன்படுத்துவது உண்டு.

தனியார் நிறுவன உருளைக்கிழங்கு வறுவல்களில் புட்டிலேட்டட் ஹைட்ராக்சினேட் சேர்க்கப்படுகிறது. வயிற்றில் கட்டி வரும். சோடியம் பைகார்பனேட் என்ற சமையல் சோடா சேர்க்கப்படாத பொருளே இல்லை. இதுவும் உப்பைப்போல் அளவுக்கு அதிகமானால் ரத்த அழுத்த நோய்க்கு வித்தாகும். சல்ஃபைட் விஷத்தால் ஒவ்வாமை, மூச்சுத்திணறல், சளி ஏற்படும்.


இது ஓர் அவசர உலகம். நல்லுணவை நல்ல விதமாகச் சமைக்கக்கூடிய பாட்டிமார்களை முதியோர் இல்லங்களுக்கு அனுப்பிவிட்டோம். ஜங்க் ஃபுட் - அதாவது கெட்ட உணவை விலைகொடுத்து வாங்கி நோயுறுகிறோம். மனிதர்களே நன்கு யோசியுங்கள். அந்தக் காலத்தில் நெல்லூர்த்த மாவு, சத்து மாவு என்று பாட்டிமார்கள் திடீர் உணவு செய்வார்களே.


அவல் உள்ளது, பழங்கள் உள்ளன, இட்லி, தோசை, உப்புமா, கிச்சடி, தயிர் சாதம், புளி சாதம், எலுமிச்சை சாதம், சப்பாத்தி என்று எதுவும் வீட்டில் செய்து நீங்களே கொண்டு வரவேண்டும். துரித உணவைவிட சமையலறை உணவுதான் நல்லது.

Wednesday, November 24, 2010

நமது உணவின் இயற்கைத்தன்மையை நாம் ஏன் கெடுக்கின்றோம்?

வெண்மை-மதி மயக்கும் வண்ணம்

வெள்ளைநிறம் நம்மை அதிகமாகவே சுண்டி இழுக்கிறது. வெண்நிற தோல் நம்மை அதிகம் மயக்குகிறது, அதுகூட பரவாயில்லை, சர்க்கரையில் தொடங்கி ,அரிசி,உப்பு,ரொட்டி,உடை ஏன் குளியலறை தொட்டி வரை வெள்ளைநிறத்தில் இருக்க வேண்டும் என விரும்புகிறோம்.ரசயனங்களின் உதவியால்,இயற்கை நமக்கு வழங்கிய நன்மைகளை எல்லாம் வெளுத்துக்கட்டி வருகிறோம்

வெள்ளைச் சர்க்கரையின் கருப்புப் பக்கம்

சர்க்கரைக்கு தூய வெண்மை எப்படிக் கிடைக்கிறது? ஆசிட் சால்க்,கார்பானிக்வாயு,சல்பர்-டை-ஆக்சைட்,ஸ்ட்ரான்டியம் 
ஹைட்ராக்சைடு,மற்றும் கந்தக அமிலம் ஆகியவற்றை சர்க்கரையுடன் சேர்க்கும்போது அது வெண்மைநிறம் அடைகிறது


பெரும்பாலும் பற்சொத்தை,நீங்கள் முறையகப் பல் துலக்காததினாலோ,அல்லது அடிக்கடி பல் டாக்டரிடம் போகாததாலோ வருவதில்லை மாறாக டீ,காபி,மற்றும் இனிப்புப் பண்டங்களில் நாம் சேர்க்கும் சர்க்கரையால் வருகிறது.எப்படி?தொடர்ந்து நாம் சாப்பிடும் சர்க்கரை நமது பற்களின் காவலனான எனாமலைப் பதம் பார்த்து விடுகிறது.

“சரி விடுங்க,சீனி தான் கெட்டது, நான் ஆர்ட்டிஃபீஸியல் சுவீட்னர் எடுத்துக்கறேன்” என்று, சில அறிவாளிகள்(?) பேச்சைக் கேட்டும்,முட்டாள்ப் பெட்டி விளம்பரம் பார்த்தும் சொல்பவர்கள் நிலை, பாவம்! அவர்களது உடல், எடை குறையாதது மட்டுமல்ல,புற்றுநோய் எனும் ஆபத்தையும் சந்திக்கிறது. ஆர்ட்டிஃபீஸியல் சுவீட்னர்கள் என்பவை சிதைந்து ,புற்றுநோய்க் காரணிகளாக மாறுவதால் இப் பிரச்சினை ஏற்படுகிறது.

தினமும் டீ,காபி போன்றவற்றின்மூலம் நாம் சப்பிடும் சர்க்கரை உடலில் அமிலத்தன்மையை ஏற்படுத்துவதால்,அதைச் சரிசெய்யும் முயற்சியில் நமது உடல் மதிப்புமிக்க தாதுப்புக்களையும்,விட்டமின்களையும் இழந்து விடுகிறது.(விட்டமின் பி மூளை சரியாக இயங்க அவசியம்),விளைவு,ஈரல் போன்ற உறுப்புக்கள் பாதிப்படைகின்றன,உடல் நோயெதிர்ப்புத் திறனை இழந்து துன்புறுகிறது.

சுத்த(சத்து?)மானமாவு

இப்பொழுது,பெரிய,பெரிய கம்பெனிகளின்சுத்தமான பாக்கெட் மாவுகளுக்கு மவுசு அதிகம்,எல்லாம் விளம்பரம் படுத்தும்பாடு.(நமக்கோ தானியமாக வாங்கி அரைக்க நேரமில்லை,அந்த வேலைகளைச் செய்த பெரியவர்களையும் கிராமத்திலோ அல்லது காப்பகத்திலோ விட்டுவிட்டோம்) புஸ் என்று வரும் பூரிக்கு ஆசைப்பட்டு வாங்கும் மாவில் இயற்கையான உயிர்ச் சத்துக்களோ,அல்லது உடலுக்கு மிகவும் அவசியமான நார்ச்சத்தோ இருப்பதில்லை எல்லாம் சுத்திகரிப்பில் போய்விடுகின்றன,கம்பெனி சேர்க்கும் விட்டமினும்,மினரலும்,அமினோஆசிட்டும்,உடலால் நிராகரிக்கப்பட்டு வெளியேற்றப்படுவதால்,உடலுக்கும் அது பெரிய வேலைப்பளு பிராண்ட் மாவைப் புழு,பூச்சிகள்கூட தின்பதில்லை,நாம்தான் விரும்பி உண்கின்றோம் சரி நமக்குத்தான் 6 அறிவாயிற்றே! இந்த வெளுத்தமாவுதான் பிஸ்ஸா, நூடுல்ஸ், பாஸ்த்தா என நாகரிக உணவாக வலம்வருகின்றது. ,நாகரிகத்தின் விலை-மலச்சிக்கல், உடல் பருமன்,சர்க்கரை வியாதி,ரத்தக்கொதிப்பு


அ(ய்)யோடைசுடு(?)உப்பு


உப்பையும் வெளுத்து வெள்ளையக்கி அதோடு அயோடினையும் சேர்த்து,அரசின் துணையோடு மூளைக்கு நல்லது,தைராய்டுக்கு நல்லது என விற்கிறார்கள், உண்மையில் அந்த உப்பு 90% சோடியமாக உள்ளது இந்த அதீத சோடியம்தான் உயர் ரத்த அழுத்தம்,பார்வைக்கோளாறு,தோல்வியாதி அகியவற்றுக்குக் காரணமாக உள்ளது.

சாதாரண உப்பில்,பொட்டாசியம்,மக்னீசியம்,துத்தநாகம் என உடலுக்குத் தேவையான பல்வேறு சத்துக்கள் உள்ளன அ(ய்)யோடைசுடு(?)உப்பைத் தின்றால் உங்களுக்கு புற்றுநோய்வரும் சாத்தியம் உள்ளது.தேவைப்படும் அயோடின் இயற்கை உணவிலேயே உள்ளது 


சுத்திகரிக்கப்பட்ட எண்ணை


கண்ணாடிபோலப் பார்க்க பளிச்சென்று நறுமணத்தோடு இருக்கும் எண்ணை, அதனை கொதிக்க வைத்து, வடிகட்டி, ரசாயனங்களோடு கலந்து வடித்தபின்தான் நமக்குக் கிடைக்கிறது.அதில் வரவு-ரசாயனங்கள்,செயற்கை நறுமணப் பொருட்கள்,தேவையற்ற கொழுப்பு. விரையம் - இயற்கையான சத்துக்கள்,வைட்டமின்கள்,மணம்,ஆரோக்கியம்


வெள்ளைச் சன்ன அரிசி

(அரிசி)"உண்டு கெட்டனர் தமிழர்" என சில அறிவியலறிஞர்களும்,ஆங்கிலமருத்துவர்களும் சொல்லக் கேட்டிருப்போம், உண்மையில் தவறு அரிசியிடமோ அல்லது அதை உணவாகக் கண்டுபிடித்த நம் முன்னோர்களிடமோ இல்லை, கலப்பினம் என அதில் கலப்படம் செய்து, நவீன ஆலையில் விட்டுத் தீட்டு,தீட்டு எனத்தீட்டி,பலப்பல பொடிகள் ரசாயனங்கள் கலந்து வெள்ளையக்கி பிராண்டரிசி எனப் பெயறிட்ட நம்மிடம்தான் உள்ளது

இனக்கலப்பால் மருத்துவ குணங்களும்,தீட்டியதால் நன்மைதரும் நார்ச்சத்து,உயிர்ச்சத்து,விட்டமின்கள் பொன்றவையும் தொலைந்து மீந்தது மாவு மட்டும்தான்.நோய் வராமல் என்ன செய்யும்.


சரி, என்னதான் தீர்வு, மதி மயக்கத்தையும்,வீன் ஆடம்பரத்தையும் விட்டுவிட்டு இயற்கைக்கு நெருக்கமாக வந்தால் தீர்வு நம் கண் முன்னே,ஆம் டீ,காபியைத் தவிர்க்கலாம் முடியாவிட்டால் குறைக்கலாம், அதுவும் முடியவில்லையா? சர்க்கரை வேண்டாம், கருப்பட்டி போடுங்க. செக்கு எண்ணையை வாங்குங்க,பாமயிலுக்குபதில்,நல்லெண்ணை,தேங்காய் எண்ணை என்று பயன் படுத்துங்க, தீட்டாத நம் பாரம்பரியரக அரிசிய கேட்டுவங்குங்க அதுவும் இயற்கையில் விளைந்ததா இருக்கட்டும்.விளம்பரம் பார்த்து மயங்காதீங்க. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

அரிசி உணவு ஆரோக்கியமானதா?

இன்று அரிசிஉணவு ஆபத்தானதாகவும் சர்க்கரைநோய்,உடல்பருமன் ஆகியவை அரிசி உணவால் வருவதாகப் பேசப்படுகிறது, இது எந்தஅளவு உண்மை?

அரிசி உலகின் மிகவும் பழமையான தானியமாகும்,அரிசியைப்பற்றிய குறிப்புகள் வேதங்களிலும்,பண்டைத்தமிழ் இலக்கியங்களிலும் காணப்படுகின்றன.நெற்பயிர் இந்தியாவில் தோன்றி உலகம் முழுவதும் பரவியதாக நம்பப்படுகிறது தமிழ்நாட்டு மக்களின் சடங்குகளிலும் அரிசி முக்கியப் பங்கு வகிக்கிறது.பன்னெடுங்காலமாக நமது முக்கிய உணவுதானியமாக அரிசி விளங்கி வருகிறது.

வேதகாலத்தில் இந்தியாவில் சுமார் 4,00,000 பாரம்பரிய நெல் ரகங்கள் இருந்ததாகக் குறிப்புகள் உள்ளன,இவை உடலுக்கு நன்மைதரக்கூடிய பலவிதமான மருத்துவகுணங்களைக் கொண்டதாக இருந்தன. இன்றும் நீலஞ்சம்பா,குழியடிச்சான் போன்றவை தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரக்கவும்,சீரகச்சம்பா வாதத்தைப் போக்கவும்,யானைக்கால் மற்றும் மூல வியாதிக்கு கருங்குறுவை எனும் ரகமும் பயன்படுத்தப்படுகின்றன

அரிசியில் உள்ள சத்துக்கள் 




அரிசி வகைபுரதம் (g/100g)இரும்பு (mg/100g)துத்தநாகம் (mg/100g)நார்ச்சத்து (g/100g)
தீட்டப்பட்ட அரிசி(வெள்ளை)6.81.20.50.6
கைக்குத்தல் அரிசி7.92.20.52.8
சிகப்பு அரிசி7.05.53.32.0
காரரிசி8.53.5
4.9












அரிசி(1/4 Cup)ஆற்றல் (kcal)மாவுச்சத்து(g)கொழுப்பு (g)நார்ச்சத்து(g)புரதம்(g)
 அரிசி16936.980.310.603.30
புழுங்கல் அரிசி17237.800.260.793.14
கைக்குத்தல் அரிசி17135.721.351.623.64



அரிசி பல்லாயிரம் ஆண்டுகளாக நமது உடலுக்குப் பழக்கப்பட்ட உணவு, மேலும் அரிசியில் உள்ள சத்துக்கள் எளிதில் ஜீரணமாகி உடலுக்குக் கிடைக்கின்றன.அரிசியின் அளவுக்கு எளிமையான சத்துக்கள்நிறைந்த தானியம் எதுவுமே இல்லை.மேலும் நமது தமிழகத்தின் சூழ்நிலைகளுக்கு ஏற்ற உணவு அரிசிதான்,அதைவிடுத்து வடநாட்டிலும்,மேல்நாட்டிலும் விளையக்கூடிய கோதுமை,ஓட்ஸ் போன்ற தானியங்களை ஆரோக்கியம் எனும்பெயரில் சாப்பிடுவது புதுப்புது சிரமங்களைத்தான் கொண்டுவரும் ஏனென்றால் அவை அனைத்தும் நம் உடலைப்பொருத்த அளவில் பரிச்சையமில்லாத புதிய ஊடுருவல்க்காரர்கள்தான்,எனவே உடலுக்குள் இவை சென்றதும் உடல் கலவரமடைந்து எதிர்ச்செயல்புரியத் தொடங்குகிறது அதுவே உடல் தொந்தரவுகளுக்கு வழி வகுக்கிறது நம் நிலை கொதிக்கும் எண்ணைக்கு பயந்து எரியும் அடுப்பில் குதித்த கதையாகிறது, வேறு என்னதான் வழி?

ஆயிரமாயிரம் ஆண்டுகள் நமது முன்னோர்களால் உண்ணப்பட்டு, ஜீன்கள் மூலம் இதுதான் நல்ல உணவு என நமது உடலுக்கும் உணர்த்தப்பட்ட பரம்பரிய ரகங்களை விட்டுவிட்டு,உயர் விளைச்சல் ரகங்கள் என வெளிநாட்டு கலப்பு இனங்களைப் பயன் படுத்தியதும்,விஷத்தைக் கொட்டி விவசாயம் செய்தது மாபெரும் தவறு,போதாதற்கு வியாபாரிகள் அரிசிக்கும் கவர்ச்சி வேண்டும் என்று ஆடைக்குறைப்பும் செய்துவிட்டனர்(அதுதானுங்க சில்க் பாலிஷ்).நாம் என்ன செய்தோம்,கவர்ச்சியில் மயங்கி நன்றாகப் பாலிஷ் செய்த மிகச்சன்னரக அரிசியாகக் கேட்டு வாங்கிப் பயன் படுத்தினோம்,விளைவு உடல் புதுரகங்களைக் கண்டு பயந்தது,பசுமைப் புரட்சி ரசாயனங்கள், உடலில் விஷத்தைச் சேர்த்தன,வியாபாரி செய்த பாலிஷும்,நாம் விரும்பிய சன்னவடிவமும் சேர்ந்து உடல் உறுப்புகளைக் குழப்பின,அதையும்விட நமது வாழ்க்கைமுறையில் உடல் உழைப்பைத் தவிர்த்தது,கண்டதைத் தின்பது,உடற்பயிற்சி இல்லாதது,ஆசை,என பலவற்றின் விளைவு ......வியாதி

பாரம்பரிய ரகங்கள் சிறிது குண்டாக இருந்தாலும் குறைந்த GI (Glycemic index) எண் கொண்டவை,மேலும் அவற்றின் மருத்துவ குணமும்,தீட்டப்படாத(பாலிஷ் செய்யப்படாத) அரிசியின் மேல் உறையில் உள்ள வைட்டமின்கள்,தாதுப்புக்கள்,அமினோ அமிலங்கள்,மற்றும் நல்லகொழுப்பு போன்றவை உடல் ஆரோக்கியமாக நோயில்லாமல் இருக்க மிகவும் உதவுகின்றன

இனிமேலும் "அரிசிச் சோற்றைத் தின்று தின்று சர்க்கரை வந்தது" என்றோ, "அடடே எந்தக்கடை அரிசி, இம்புட்டு குண்டாயிட்டே" என்றோ பழி போடாமல்,நஞ்சில்லா வேளாண்மையில் விளைந்த,பாரம்பரிய ரகங்களை வாங்கி சாப்பிடுங்க,அதுவும் பாலிஷ் போடாததாக இருக்கட்டும்.அப்புறம்பாருங்க உங்க சாப்பாடும் அமிர்தம்தான்

சர்க்கரைவியாதியும் பூச்சிக் கொல்லி(!) மருந்துகளும்

பொதுவாக சர்க்கரை நோய்பற்றிய அனைத்து விவாதங்களிலும் தவறாமல் இடம்பெறுபவை மரபுப் பண்பு, மனஇறுக்கம் மற்றும் உடல் பருமன். இப்பொழுது இதில் நாம் (யார்? விஞ்ஞானிகளா!) எதிர் பாராத ஒன்றையும் சேர்க்கவேண்டி உள்ளது,அவை எளிதில் சிதையாத அங்கக மாசுகள் (வேறோன்றுமல்ல நமது பூச்சிக் கொல்லி(!) மருந்துகள்தான்) ஆகும். அவை மனிதன் மற்றும் விலங்குகளின் உடல் திசுக்களில் சேர்ந்து உயிரியல் செரிவும்உணவுச்சங்கிலியில் உயிரிவழிப் பெருக்கமும் அடைகின்றன. இது சர்க்கரைவியாதியைக் கட்டுப்படுத்தவும்,தவிர்க்கவும் நாம் எடுக்கும் முயற்சிக்ளுக்குச் சுற்றுச் சூழல் எனும் புதிய பரிமாணத்தைச் சேர்த்துள்ளது.

கோவையைச் சேர்ந்த PSG மருத்துவ அறிவியல் மற்றும் ஆய்வு நிறுவனமும்,அமெரிக்க மின்னசோட்டா பல்கலைக் கழகமும் இணைந்து சுமார் 12 விதமான, சர்க்கரைவியாதியை ஏற்படுத்தும் அழியா அங்ககமாசுக்களைக் கண்டறிந்துள்ளனர் DDT, ஆல்ரின், குளோர்டேன், என்ரின்ஹெபடகுளோர், ஹெஃஸாகுளோர் போன்ற பல பூச்சி மருந்துகள் நமது சுரப்பிகளைப்பாதித்து ஹார்மோன்களின் செயல்பாடுகளைப் பாதிக்கின்றன என்று மின்னசோட்டா பல்கலைக் கழக பேராசிரியர் வில்லியம் A டோஸ்கனொ சொல்கிறார்.

மேலும் அமெரிக்காவில் தடைசெய்யப்பட்ட பல பூச்சிமருந்துகள் இங்கு தாராளமாகப் பயன்படுத்த்ப்ப்டுவதாக அவர் வருத்தம் தெரிவிக்கிறார்
நஞ்சில்லா வேளாண்மையே நோயற்ற வாழ்வுக்கு வழி. மருந்தடித்து, யூரியா, டி.ஏ.பி,பொட்டாஷ், நுண்ணூடமெல்லாம் போட்டு காசு சேத்தினா…நல்லவாயன் சம்பாதித்து (விவசாயி?) நாறவாயன் (ஆஸ்பத்திரி!) தின்னகதை ஆயிடுமோ? என்னமோபோங்க!