our inspiration

Wednesday, November 24, 2010

அரிசி உணவு ஆரோக்கியமானதா?

இன்று அரிசிஉணவு ஆபத்தானதாகவும் சர்க்கரைநோய்,உடல்பருமன் ஆகியவை அரிசி உணவால் வருவதாகப் பேசப்படுகிறது, இது எந்தஅளவு உண்மை?

அரிசி உலகின் மிகவும் பழமையான தானியமாகும்,அரிசியைப்பற்றிய குறிப்புகள் வேதங்களிலும்,பண்டைத்தமிழ் இலக்கியங்களிலும் காணப்படுகின்றன.நெற்பயிர் இந்தியாவில் தோன்றி உலகம் முழுவதும் பரவியதாக நம்பப்படுகிறது தமிழ்நாட்டு மக்களின் சடங்குகளிலும் அரிசி முக்கியப் பங்கு வகிக்கிறது.பன்னெடுங்காலமாக நமது முக்கிய உணவுதானியமாக அரிசி விளங்கி வருகிறது.

வேதகாலத்தில் இந்தியாவில் சுமார் 4,00,000 பாரம்பரிய நெல் ரகங்கள் இருந்ததாகக் குறிப்புகள் உள்ளன,இவை உடலுக்கு நன்மைதரக்கூடிய பலவிதமான மருத்துவகுணங்களைக் கொண்டதாக இருந்தன. இன்றும் நீலஞ்சம்பா,குழியடிச்சான் போன்றவை தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரக்கவும்,சீரகச்சம்பா வாதத்தைப் போக்கவும்,யானைக்கால் மற்றும் மூல வியாதிக்கு கருங்குறுவை எனும் ரகமும் பயன்படுத்தப்படுகின்றன

அரிசியில் உள்ள சத்துக்கள் 




அரிசி வகைபுரதம் (g/100g)இரும்பு (mg/100g)துத்தநாகம் (mg/100g)நார்ச்சத்து (g/100g)
தீட்டப்பட்ட அரிசி(வெள்ளை)6.81.20.50.6
கைக்குத்தல் அரிசி7.92.20.52.8
சிகப்பு அரிசி7.05.53.32.0
காரரிசி8.53.5
4.9












அரிசி(1/4 Cup)ஆற்றல் (kcal)மாவுச்சத்து(g)கொழுப்பு (g)நார்ச்சத்து(g)புரதம்(g)
 அரிசி16936.980.310.603.30
புழுங்கல் அரிசி17237.800.260.793.14
கைக்குத்தல் அரிசி17135.721.351.623.64



அரிசி பல்லாயிரம் ஆண்டுகளாக நமது உடலுக்குப் பழக்கப்பட்ட உணவு, மேலும் அரிசியில் உள்ள சத்துக்கள் எளிதில் ஜீரணமாகி உடலுக்குக் கிடைக்கின்றன.அரிசியின் அளவுக்கு எளிமையான சத்துக்கள்நிறைந்த தானியம் எதுவுமே இல்லை.மேலும் நமது தமிழகத்தின் சூழ்நிலைகளுக்கு ஏற்ற உணவு அரிசிதான்,அதைவிடுத்து வடநாட்டிலும்,மேல்நாட்டிலும் விளையக்கூடிய கோதுமை,ஓட்ஸ் போன்ற தானியங்களை ஆரோக்கியம் எனும்பெயரில் சாப்பிடுவது புதுப்புது சிரமங்களைத்தான் கொண்டுவரும் ஏனென்றால் அவை அனைத்தும் நம் உடலைப்பொருத்த அளவில் பரிச்சையமில்லாத புதிய ஊடுருவல்க்காரர்கள்தான்,எனவே உடலுக்குள் இவை சென்றதும் உடல் கலவரமடைந்து எதிர்ச்செயல்புரியத் தொடங்குகிறது அதுவே உடல் தொந்தரவுகளுக்கு வழி வகுக்கிறது நம் நிலை கொதிக்கும் எண்ணைக்கு பயந்து எரியும் அடுப்பில் குதித்த கதையாகிறது, வேறு என்னதான் வழி?

ஆயிரமாயிரம் ஆண்டுகள் நமது முன்னோர்களால் உண்ணப்பட்டு, ஜீன்கள் மூலம் இதுதான் நல்ல உணவு என நமது உடலுக்கும் உணர்த்தப்பட்ட பரம்பரிய ரகங்களை விட்டுவிட்டு,உயர் விளைச்சல் ரகங்கள் என வெளிநாட்டு கலப்பு இனங்களைப் பயன் படுத்தியதும்,விஷத்தைக் கொட்டி விவசாயம் செய்தது மாபெரும் தவறு,போதாதற்கு வியாபாரிகள் அரிசிக்கும் கவர்ச்சி வேண்டும் என்று ஆடைக்குறைப்பும் செய்துவிட்டனர்(அதுதானுங்க சில்க் பாலிஷ்).நாம் என்ன செய்தோம்,கவர்ச்சியில் மயங்கி நன்றாகப் பாலிஷ் செய்த மிகச்சன்னரக அரிசியாகக் கேட்டு வாங்கிப் பயன் படுத்தினோம்,விளைவு உடல் புதுரகங்களைக் கண்டு பயந்தது,பசுமைப் புரட்சி ரசாயனங்கள், உடலில் விஷத்தைச் சேர்த்தன,வியாபாரி செய்த பாலிஷும்,நாம் விரும்பிய சன்னவடிவமும் சேர்ந்து உடல் உறுப்புகளைக் குழப்பின,அதையும்விட நமது வாழ்க்கைமுறையில் உடல் உழைப்பைத் தவிர்த்தது,கண்டதைத் தின்பது,உடற்பயிற்சி இல்லாதது,ஆசை,என பலவற்றின் விளைவு ......வியாதி

பாரம்பரிய ரகங்கள் சிறிது குண்டாக இருந்தாலும் குறைந்த GI (Glycemic index) எண் கொண்டவை,மேலும் அவற்றின் மருத்துவ குணமும்,தீட்டப்படாத(பாலிஷ் செய்யப்படாத) அரிசியின் மேல் உறையில் உள்ள வைட்டமின்கள்,தாதுப்புக்கள்,அமினோ அமிலங்கள்,மற்றும் நல்லகொழுப்பு போன்றவை உடல் ஆரோக்கியமாக நோயில்லாமல் இருக்க மிகவும் உதவுகின்றன

இனிமேலும் "அரிசிச் சோற்றைத் தின்று தின்று சர்க்கரை வந்தது" என்றோ, "அடடே எந்தக்கடை அரிசி, இம்புட்டு குண்டாயிட்டே" என்றோ பழி போடாமல்,நஞ்சில்லா வேளாண்மையில் விளைந்த,பாரம்பரிய ரகங்களை வாங்கி சாப்பிடுங்க,அதுவும் பாலிஷ் போடாததாக இருக்கட்டும்.அப்புறம்பாருங்க உங்க சாப்பாடும் அமிர்தம்தான்

No comments:

Post a Comment