our inspiration

Wednesday, November 24, 2010

நமது உணவின் இயற்கைத்தன்மையை நாம் ஏன் கெடுக்கின்றோம்?

வெண்மை-மதி மயக்கும் வண்ணம்

வெள்ளைநிறம் நம்மை அதிகமாகவே சுண்டி இழுக்கிறது. வெண்நிற தோல் நம்மை அதிகம் மயக்குகிறது, அதுகூட பரவாயில்லை, சர்க்கரையில் தொடங்கி ,அரிசி,உப்பு,ரொட்டி,உடை ஏன் குளியலறை தொட்டி வரை வெள்ளைநிறத்தில் இருக்க வேண்டும் என விரும்புகிறோம்.ரசயனங்களின் உதவியால்,இயற்கை நமக்கு வழங்கிய நன்மைகளை எல்லாம் வெளுத்துக்கட்டி வருகிறோம்

வெள்ளைச் சர்க்கரையின் கருப்புப் பக்கம்

சர்க்கரைக்கு தூய வெண்மை எப்படிக் கிடைக்கிறது? ஆசிட் சால்க்,கார்பானிக்வாயு,சல்பர்-டை-ஆக்சைட்,ஸ்ட்ரான்டியம் 
ஹைட்ராக்சைடு,மற்றும் கந்தக அமிலம் ஆகியவற்றை சர்க்கரையுடன் சேர்க்கும்போது அது வெண்மைநிறம் அடைகிறது


பெரும்பாலும் பற்சொத்தை,நீங்கள் முறையகப் பல் துலக்காததினாலோ,அல்லது அடிக்கடி பல் டாக்டரிடம் போகாததாலோ வருவதில்லை மாறாக டீ,காபி,மற்றும் இனிப்புப் பண்டங்களில் நாம் சேர்க்கும் சர்க்கரையால் வருகிறது.எப்படி?தொடர்ந்து நாம் சாப்பிடும் சர்க்கரை நமது பற்களின் காவலனான எனாமலைப் பதம் பார்த்து விடுகிறது.

“சரி விடுங்க,சீனி தான் கெட்டது, நான் ஆர்ட்டிஃபீஸியல் சுவீட்னர் எடுத்துக்கறேன்” என்று, சில அறிவாளிகள்(?) பேச்சைக் கேட்டும்,முட்டாள்ப் பெட்டி விளம்பரம் பார்த்தும் சொல்பவர்கள் நிலை, பாவம்! அவர்களது உடல், எடை குறையாதது மட்டுமல்ல,புற்றுநோய் எனும் ஆபத்தையும் சந்திக்கிறது. ஆர்ட்டிஃபீஸியல் சுவீட்னர்கள் என்பவை சிதைந்து ,புற்றுநோய்க் காரணிகளாக மாறுவதால் இப் பிரச்சினை ஏற்படுகிறது.

தினமும் டீ,காபி போன்றவற்றின்மூலம் நாம் சப்பிடும் சர்க்கரை உடலில் அமிலத்தன்மையை ஏற்படுத்துவதால்,அதைச் சரிசெய்யும் முயற்சியில் நமது உடல் மதிப்புமிக்க தாதுப்புக்களையும்,விட்டமின்களையும் இழந்து விடுகிறது.(விட்டமின் பி மூளை சரியாக இயங்க அவசியம்),விளைவு,ஈரல் போன்ற உறுப்புக்கள் பாதிப்படைகின்றன,உடல் நோயெதிர்ப்புத் திறனை இழந்து துன்புறுகிறது.

சுத்த(சத்து?)மானமாவு

இப்பொழுது,பெரிய,பெரிய கம்பெனிகளின்சுத்தமான பாக்கெட் மாவுகளுக்கு மவுசு அதிகம்,எல்லாம் விளம்பரம் படுத்தும்பாடு.(நமக்கோ தானியமாக வாங்கி அரைக்க நேரமில்லை,அந்த வேலைகளைச் செய்த பெரியவர்களையும் கிராமத்திலோ அல்லது காப்பகத்திலோ விட்டுவிட்டோம்) புஸ் என்று வரும் பூரிக்கு ஆசைப்பட்டு வாங்கும் மாவில் இயற்கையான உயிர்ச் சத்துக்களோ,அல்லது உடலுக்கு மிகவும் அவசியமான நார்ச்சத்தோ இருப்பதில்லை எல்லாம் சுத்திகரிப்பில் போய்விடுகின்றன,கம்பெனி சேர்க்கும் விட்டமினும்,மினரலும்,அமினோஆசிட்டும்,உடலால் நிராகரிக்கப்பட்டு வெளியேற்றப்படுவதால்,உடலுக்கும் அது பெரிய வேலைப்பளு பிராண்ட் மாவைப் புழு,பூச்சிகள்கூட தின்பதில்லை,நாம்தான் விரும்பி உண்கின்றோம் சரி நமக்குத்தான் 6 அறிவாயிற்றே! இந்த வெளுத்தமாவுதான் பிஸ்ஸா, நூடுல்ஸ், பாஸ்த்தா என நாகரிக உணவாக வலம்வருகின்றது. ,நாகரிகத்தின் விலை-மலச்சிக்கல், உடல் பருமன்,சர்க்கரை வியாதி,ரத்தக்கொதிப்பு


அ(ய்)யோடைசுடு(?)உப்பு


உப்பையும் வெளுத்து வெள்ளையக்கி அதோடு அயோடினையும் சேர்த்து,அரசின் துணையோடு மூளைக்கு நல்லது,தைராய்டுக்கு நல்லது என விற்கிறார்கள், உண்மையில் அந்த உப்பு 90% சோடியமாக உள்ளது இந்த அதீத சோடியம்தான் உயர் ரத்த அழுத்தம்,பார்வைக்கோளாறு,தோல்வியாதி அகியவற்றுக்குக் காரணமாக உள்ளது.

சாதாரண உப்பில்,பொட்டாசியம்,மக்னீசியம்,துத்தநாகம் என உடலுக்குத் தேவையான பல்வேறு சத்துக்கள் உள்ளன அ(ய்)யோடைசுடு(?)உப்பைத் தின்றால் உங்களுக்கு புற்றுநோய்வரும் சாத்தியம் உள்ளது.தேவைப்படும் அயோடின் இயற்கை உணவிலேயே உள்ளது 


சுத்திகரிக்கப்பட்ட எண்ணை


கண்ணாடிபோலப் பார்க்க பளிச்சென்று நறுமணத்தோடு இருக்கும் எண்ணை, அதனை கொதிக்க வைத்து, வடிகட்டி, ரசாயனங்களோடு கலந்து வடித்தபின்தான் நமக்குக் கிடைக்கிறது.அதில் வரவு-ரசாயனங்கள்,செயற்கை நறுமணப் பொருட்கள்,தேவையற்ற கொழுப்பு. விரையம் - இயற்கையான சத்துக்கள்,வைட்டமின்கள்,மணம்,ஆரோக்கியம்


வெள்ளைச் சன்ன அரிசி

(அரிசி)"உண்டு கெட்டனர் தமிழர்" என சில அறிவியலறிஞர்களும்,ஆங்கிலமருத்துவர்களும் சொல்லக் கேட்டிருப்போம், உண்மையில் தவறு அரிசியிடமோ அல்லது அதை உணவாகக் கண்டுபிடித்த நம் முன்னோர்களிடமோ இல்லை, கலப்பினம் என அதில் கலப்படம் செய்து, நவீன ஆலையில் விட்டுத் தீட்டு,தீட்டு எனத்தீட்டி,பலப்பல பொடிகள் ரசாயனங்கள் கலந்து வெள்ளையக்கி பிராண்டரிசி எனப் பெயறிட்ட நம்மிடம்தான் உள்ளது

இனக்கலப்பால் மருத்துவ குணங்களும்,தீட்டியதால் நன்மைதரும் நார்ச்சத்து,உயிர்ச்சத்து,விட்டமின்கள் பொன்றவையும் தொலைந்து மீந்தது மாவு மட்டும்தான்.நோய் வராமல் என்ன செய்யும்.


சரி, என்னதான் தீர்வு, மதி மயக்கத்தையும்,வீன் ஆடம்பரத்தையும் விட்டுவிட்டு இயற்கைக்கு நெருக்கமாக வந்தால் தீர்வு நம் கண் முன்னே,ஆம் டீ,காபியைத் தவிர்க்கலாம் முடியாவிட்டால் குறைக்கலாம், அதுவும் முடியவில்லையா? சர்க்கரை வேண்டாம், கருப்பட்டி போடுங்க. செக்கு எண்ணையை வாங்குங்க,பாமயிலுக்குபதில்,நல்லெண்ணை,தேங்காய் எண்ணை என்று பயன் படுத்துங்க, தீட்டாத நம் பாரம்பரியரக அரிசிய கேட்டுவங்குங்க அதுவும் இயற்கையில் விளைந்ததா இருக்கட்டும்.விளம்பரம் பார்த்து மயங்காதீங்க. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

No comments:

Post a Comment