our inspiration

Wednesday, November 24, 2010

தென்னை வாடல்,வைரஸ் நோய்களுக்கு சர்வரோகநிவாரணி

 1 எருக்கந்தழை-2kg
 2 பொன்னரளி கொட்டை-1kg 
3 நீல நொச்சி-ஒரு கைப்பிடி
 4 ஆடாதோடா-1kg
 5 சிரியா நங்கை-ஒரு கைப்பிடி 
6 கொட்டை தழை-1kg 
7 முயல்காது கள்ளி-1kg 
8 குமுட்டிக்காய்-200gm
 10 எட்டிக்காய்-200gm 
11 பாலைத்தழை-1kg 
12 இஞ்சி-250gm 
13 வசம்பு-200gm 
14 வில்வக்காய்-3 எண்ணிக்கை 
15 மஞ்சள் விரளி-200gm 

இவற்றை நன்றாக பசைபோல் அறைத்து 100 Lit தண்ணீரில் கரைத்து வடிகட்டி அப்படியே அனைத்து பயிர்களுக்கும் தெளிக்கலாம்,இக்கரைசல் பூச்சி,மற்றும் பூஞ்சான நோய்களைக் கட்டுப்படுத்தும்

 தென்னையில் வரும் வாடல் நோய்களைக் கட்டுப்படுத்த, மேற்கண்ட அனைத்துப்பொருட்களையும் ஓரளவு பொடிசெய்து ஒரு மண்பானையில் போட்டு அக்கலவை மூழ்கும்வறை தண்ணீர் ஊற்றி 3 முறை நன்கு பொங்குமளவு கொதிக்கவிட்டு சுமார் 12 மணி நேரம் அடுப்புசூட்டில் வைத்திருந்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவேண்டும்,ஒரு மரத்துக்கு இக்கரைசலில் 10 மி.லி யை, தண்ணீர் 10மி.லி யுடன் கலந்து,15 நாள் இடைவெளியில் வேர்மூலம் செலுத்தி வந்தால் ,அனைத்து வித வாடல் நோய்களையும் கட்டுப்படுத்தலாம்

No comments:

Post a Comment