our inspiration

Wednesday, November 24, 2010

சர்க்கரைவியாதியும் பூச்சிக் கொல்லி(!) மருந்துகளும்

பொதுவாக சர்க்கரை நோய்பற்றிய அனைத்து விவாதங்களிலும் தவறாமல் இடம்பெறுபவை மரபுப் பண்பு, மனஇறுக்கம் மற்றும் உடல் பருமன். இப்பொழுது இதில் நாம் (யார்? விஞ்ஞானிகளா!) எதிர் பாராத ஒன்றையும் சேர்க்கவேண்டி உள்ளது,அவை எளிதில் சிதையாத அங்கக மாசுகள் (வேறோன்றுமல்ல நமது பூச்சிக் கொல்லி(!) மருந்துகள்தான்) ஆகும். அவை மனிதன் மற்றும் விலங்குகளின் உடல் திசுக்களில் சேர்ந்து உயிரியல் செரிவும்உணவுச்சங்கிலியில் உயிரிவழிப் பெருக்கமும் அடைகின்றன. இது சர்க்கரைவியாதியைக் கட்டுப்படுத்தவும்,தவிர்க்கவும் நாம் எடுக்கும் முயற்சிக்ளுக்குச் சுற்றுச் சூழல் எனும் புதிய பரிமாணத்தைச் சேர்த்துள்ளது.

கோவையைச் சேர்ந்த PSG மருத்துவ அறிவியல் மற்றும் ஆய்வு நிறுவனமும்,அமெரிக்க மின்னசோட்டா பல்கலைக் கழகமும் இணைந்து சுமார் 12 விதமான, சர்க்கரைவியாதியை ஏற்படுத்தும் அழியா அங்ககமாசுக்களைக் கண்டறிந்துள்ளனர் DDT, ஆல்ரின், குளோர்டேன், என்ரின்ஹெபடகுளோர், ஹெஃஸாகுளோர் போன்ற பல பூச்சி மருந்துகள் நமது சுரப்பிகளைப்பாதித்து ஹார்மோன்களின் செயல்பாடுகளைப் பாதிக்கின்றன என்று மின்னசோட்டா பல்கலைக் கழக பேராசிரியர் வில்லியம் A டோஸ்கனொ சொல்கிறார்.

மேலும் அமெரிக்காவில் தடைசெய்யப்பட்ட பல பூச்சிமருந்துகள் இங்கு தாராளமாகப் பயன்படுத்த்ப்ப்டுவதாக அவர் வருத்தம் தெரிவிக்கிறார்
நஞ்சில்லா வேளாண்மையே நோயற்ற வாழ்வுக்கு வழி. மருந்தடித்து, யூரியா, டி.ஏ.பி,பொட்டாஷ், நுண்ணூடமெல்லாம் போட்டு காசு சேத்தினா…நல்லவாயன் சம்பாதித்து (விவசாயி?) நாறவாயன் (ஆஸ்பத்திரி!) தின்னகதை ஆயிடுமோ? என்னமோபோங்க!

No comments:

Post a Comment